மனிதனை தவிர ஏனைய ஜீவ ராசிகள் அனைத்தும்இயற்கையில் கிடைக்கும் உணவுகளை உண்டு வாழ்கின்றன.
அவைகள் நோய் நொடிகள் அற்றும் இருக்கின்றன.
தீயை பயன்படுத்தி தயாரிக்காத எவ்வகை உணவும் இயற்கை உணவு ஆகும்.
- பழங்கள்
- கூட்டுப்பழங்கள்
- பழரசங்கள்
- கீரைகள்
- காய்கறிகள்
- கூட்டுகாய்கறிகள்
- உலர்பழங்கள்
- முளைக்கட்டிய தானியங்கள்
- பருப்பு வகைகள்
ஆகிய அனைத்தும் இயற்கை உணவு ஆகும்.
உணவை தேர்ந்தெடுத்தல்
-
எளிதில் ஜீரணமாகும் உணவை அறிந்து தேர்ந்தெடுக்க வேண்டும்.
- அன்றாட உணவில் தானியங்கள், காய்கறிகள், கீரைகள், கொட்டைகள், பருப்புகள், பழங்கள் முறையான அளவில் சேர்க்க வேண்டும்.
- வயதிற்கு, உடலுக்கு ஏற்ற உணவையே எடுத்துக்கொள்ள வேண்டும்.
- நார்சத்துகளுடைய உணவை சேர்த்து கொள்ள, கழிவுகள் தங்காது.
- நமக்கு எந்த உணவு ஒவ்வாமை என அறிந்து அவற்றை தவிர்த்தல் நலம்.
- அதிக காரம், புளிப்பு, மைதா மாவு பண்டங்களை தவிர்க்க வேண்டும்.
- காலையில் சிறுதானிய உணவுகளை எடுத்தல் சிறந்தது.
- மாமிசம் அதிக எண்ணெய் பண்டங்களை தவிர்க்க வேண்டும்.
- துளசி வேம்பு கர்பூரபூரவல்லி, அருகம்புல் போன்ற மூலிகை உணவினை பயன் அறிந்து அவற்றை பயன்படுத்த வேண்டும்.
- நோய்கள் பாதிக்கப்பட்டோர் அதை குணமாக்கும் உணவு எது என்று அறிந்து உண்ண வேண்டும்.
- மன அமைதியை தரும் சாத்வீக உணவை உண்ண வேண்டும்.
- கருகிய, அடிபிடித்த உணவை உட்கொள்ள கூடாது.
உணவு சுத்தம் செய்யும் முறை
- காய்கறிகள், கீரைகளை நன்கு கழுவிய பிறகு மரப்பலகையை கொண்டு வெட்ட வேண்டும்.
- காளிபிளவர், திராட்சையை உப்பு கலந்த சுடு நீரில் கழுவ வேண்டும்
- சிறுதானியங்களில் கல், மண் அதிகமாக இருக்க வாய்ப்பிருப்பதால் அதிக முறை சுத்தப்படுத்த வேண்டும்.
- கீரைகளில் வேறு, புல் வகைகளை களைய வேண்டும்.
- அரிசியை அதிக முறை கழுவ கூடாது.
- வாழைப்பூவின் நார் பகுதி, இஞ்சியின் தோல் போன்றவற்றை கூடுதல் கவனம் எடுத்து நீக்க வேண்டும்.
- சமையலுக்கு பயன்படுத்தும் துணி தூய்மையானதாக இருத்தல் அவசியம்.
உண்ணும் முறை
- வடக்கு திசை நோக்கி உண்ணக்கூடாது.
- தரையில் விரிப்பின்மீது அமர்ந்து உண்ண வேண்டும்.
- பேசிக்கொண்டோ, தொலைக்காட்சி பார்த்துக்கொண்டோ, சிரித்துகொண்டு உணவு சாப்பிட கூடாது.
- உண்பதற்கு அமர்ந்த பின்னும், உண்ட பின்னும் தண்ணீர் அதிகம் குடிக்க கூடாது.
- வேக வேகமாக உண்ணுதலும், மிக மெதுமாக உண்ண கூடாது, பசித்து புசிக்க வேண்டும்.
- உண்ணும் பழக்கம் எப்போதும் ஒரே மாதிரியாக இருக்க வேண்டும். குளித்த பிறகு 30 நிமிட இடைவெளி இருக்க வேண்டும்.
- கை கால்களை சுத்தம் செய்து மன அமைதியுடன், தெளிவுடன் உட்கார்ந்து உண்ண வேண்டும்.
- நன்கு உமிழ்நீருடன் மென்று உண்ண வேண்டும்.
- வெதுவெதுப்பான புதிய உணவையே உண்ண வேண்டும்.
- உண்ணும் முன் நெய் சேர்ந்து உண்ணுதல் எளிதில் உணவு உட்செல்லும்.
-
ஒரு வேளை உணவிற்கும், அடுத்த வேளை உணவிற்கும் 4 மணி நேரம் இடைவெளி தேவை.
- ஆறு சுவைகளில் முதலில் இனிப்பு சுவையை சாப்பிட வேண்டும்.
- உணவு வீணாகிவிடும் என்று அளவிற்கு அதிகமாக உண்ணக்கூடாது பெரியவர்கள், குழந்தைகளுக்கு உணவளித்த பின் உண்ண வேண்டும்.
You must be logged in to post a comment.